டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிர்கள்... மேட்டூர் அணை நீரை முறை வைக்காமல் திறக்க வைகோ வலியுறுத்தல்
சென்னை: காவிரி பாசன பகுதிகளில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற, முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
''காவிரி பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவதற்குப் பதிலாக, நீர் இருப்புக் குறைவைக் காரணம் கூறி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதிதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து 23 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டால்தான், காவிரியில் 10,650 கன அடி நீரும், வெண்ணாற்றில் 9,370 கன அடி நீரும் விவசாயிகளின் பயிர் சாகுபடிக்குப் போய்ச் சேரும்.
மீதி 4 ஆயிரம் கன அடி நீர் குடிநீருக்காகச் சென்றுவிடும். ஆனால், தற்போது 12 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கு வெறும் 13 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
அதுவும் முறை வைத்துத் திறக்கப்படுவதால், கடை மடை விவசாயிகளுக்கு முழுமையான பயன் அளிக்கவில்லை. இதனால் விவசாயிகள் மழையை நம்பி நேரடி விதைப்பு முறையில் விதைகளைத் தெளித்தனர். அவை முளைத்து வரும் பருவத்தில் தண்ணீர் இல்லாமல் கருகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், காவிரியில் சாதாரண அளவான 10,650 கன அடி நீரையும், அதைப் போன்று வெண்ணாற்றில் 9,370 கன அடி நீரையும் முறை வைக்காமல் தொடர்ச்சியாக திறக்கப்பட்டால் தான் பயிர் சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, காவிரி கடை மடை பகுதிகளில் நேரடி விதைப்பின் மூலம் முளைவிட்டுள்ள பயிர்களைக் கருகாமல் காப்பாற்றுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து முறை வைக்காமல் தொடர்ச்சியாக 23 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications