டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிர்கள்... மேட்டூர் அணை நீரை முறை வைக்காமல் திறக்க வைகோ வலியுறுத்தல்
சென்னை: காவிரி பாசன பகுதிகளில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற, முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
''காவிரி பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவதற்குப் பதிலாக, நீர் இருப்புக் குறைவைக் காரணம் கூறி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதிதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து 23 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டால்தான், காவிரியில் 10,650 கன அடி நீரும், வெண்ணாற்றில் 9,370 கன அடி நீரும் விவசாயிகளின் பயிர் சாகுபடிக்குப் போய்ச் சேரும்.
மீதி 4 ஆயிரம் கன அடி நீர் குடிநீருக்காகச் சென்றுவிடும். ஆனால், தற்போது 12 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கு வெறும் 13 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
அதுவும் முறை வைத்துத் திறக்கப்படுவதால், கடை மடை விவசாயிகளுக்கு முழுமையான பயன் அளிக்கவில்லை. இதனால் விவசாயிகள் மழையை நம்பி நேரடி விதைப்பு முறையில் விதைகளைத் தெளித்தனர். அவை முளைத்து வரும் பருவத்தில் தண்ணீர் இல்லாமல் கருகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், காவிரியில் சாதாரண அளவான 10,650 கன அடி நீரையும், அதைப் போன்று வெண்ணாற்றில் 9,370 கன அடி நீரையும் முறை வைக்காமல் தொடர்ச்சியாக திறக்கப்பட்டால் தான் பயிர் சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, காவிரி கடை மடை பகுதிகளில் நேரடி விதைப்பின் மூலம் முளைவிட்டுள்ள பயிர்களைக் கருகாமல் காப்பாற்றுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து முறை வைக்காமல் தொடர்ச்சியாக 23 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications