கருணாநிதி குறித்து ஜாதி ரீதியாக அப்படி என்னதான் பேசினார் வைகோ?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை ஜாதிய ரீதியாக மதிமுக பொதுச்செயலர் விமர்சனம் செய்ததால் அக்கட்சி தொண்டர்கள் கொந்தளித்து தமிழகம் முழுவதும் கொடும்பாவி எரித்தனர். மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரும் வைகோவின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் வைகோவும் கூட கருணாநிதியிடம் தாய் மீது சத்தியம் செய்து மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். இவ்வளவு சர்ச்சைக்கும் காரணமான சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று வைகோ கூறிய கருத்து இதுதான்:
தேமுதிகவின் சந்திரகுமார் செய்தது பச்சைதுரோகம்...இதைவிட நீ பாலில் விஷத்தைக் கொடுத்து... விஜயகாந்துக்கு விஷத்தைக் கொடுத்திருக்கலாம்...சோத்துல விஷத்தைப் போட்டிருக்கலாம்..
போடுவீங்க நீங்க... இந்த மாதிரி ஆளுக... நாங்க நம்புறவனுக்காக தலையை கொடுப்போம்...நம்புறவனுக்காக உயிரை கொடுப்போம்... இந்த மாதிரியான கீழ்த்தரமான ஈனத்தனமான வேலை....
இதை ரொம்ப கடுமையான வார்த்தையில் சொல்லனும்னா வேற ஒரு தொழில் இருக்கு.. அந்த தொழிலை செய்யலாம்னு சொல்லலாம்...
எம் மேல ரொம்ப பிரியமான டிவிகள் 2,3 டிவி இங்கே இருக்கு... அவங்க இதை எடுத்துப் போட்டு உலகம் பூராவும் என்னை டேமேஜ் பண்ணிடுவாங்க... பயப்பட வேண்டியிருக்கு உங்களுக்கு... நான் இதைவிட இன்னொரு தொழில் பண்ணலாமேன்னு கேட்டுறலாம்..அது என்ன தொழில்னு சொல்றாங்க..
தறி நெசவா இருக்கும்... உழுவதா இருக்கும்...உழவு செய்யறதா இருக்கும்...பிசினஸ் பண்றதா இருக்கும்...வேற ஒரு தொழில்...
உலகம் பூராவும் பிரசித்தி பெற்று ஆதி மனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்... அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்.... அந்த தொழிலை செய்யலாம் இவங்க ...
கலைஞரும் செய்யலாம்.. இவங்களும் செய்யலாம்.... நா...நான் ஒன்னும் தப்பா சொல்லலைங்க... அவரு நாதஸ்வரம் வாசிக்கக் கூடிய தொழிலும் தெரியும்... அதனால சொன்னேன்...ஒன்னும் இழிவா சொல்லலை... உலகத்தின் தலைசிறந்த இசை தமிழிசை. அதுக்குதான் உயர்வா சொல்றேன் அண்ணன் கலைஞரை....
இவ்வாறு வைகோ கூறியிருந்தார்.
இதனால் திமுக தலைவர் கருணாநிதியை ஜாதிய ரீதியாக வைகோ விமர்சனம் செய்ததாக சர்ச்சை வெடித்தது. திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வைகோவின் கொடும்பாவியை எரித்தனர். இதைத் தொடர்ந்து வைகோ தாய் மீது சத்தியமாக உள்நோக்கத்துடன் பேசவில்லை; என் வரலாற்றில் தான் செய்த மிகப் பெரிய குற்றம்; ஆகையால் 'அண்ணன் கலைஞரிடம்' மன்னிப்பு கேட்கிறேன் என அறிக்கைவிட இந்த பஞ்சாயத்து ஓய ஆரம்பித்துள்ளது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications