2010ல் கருணாநிதியை வைகோ இப்படி விமர்சித்திருந்தார்....!

Subscribe to Oneindia Tamil

Vaiko's slam on Karunanidhi in 2010
ராஜபாளையம்: ஈழத் தமிழர்களை காக்க தவறிய கருணாநிதி, தமிழ் இனத் துரோ'கி என்று 2010ம் ஆண்டு ராஜபாளையத்தில் நடந்த கட்சி மாணவர் அணி கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ கடுமையாக விமர்சித்திருந்தார்.

மதிமுக, விருதுநகர் மாவட்ட மாணவரணி சார்பில் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது வைகோ பேசியது இது...

"முல்லைப் பெரியாறு உரிமையை நாம் இழந்தால், 65 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்காது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பாசன வசதி பாதிக்கும்.

தலைநகரில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு குடும்பத்தின் கையில் தமிழகம் உள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பேராபத்து.

இந்தியாவில் அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்கினால் தான் ஒருமைப்பாடு நிலைக்கும்; இல்லாவிட்டால் சிதறிவிடும்.

வீரர்களை பற்றி வீரர்கள் தான் பேசவேண்டும். தியாகிகளை பற்றி தியாகிகள் தான் பேசவேண்டும். கருணாநிதி தமிழ் இனத்துரோகி. கடந்த ஆண்டு ஜன., 30ல் முத்துக்குமாரின் உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, மதுரையில் கருணாநிதி தனது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடினார் என்று பேசியிருந்தார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+