காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்ட மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது : வைகோ
காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்ட மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது என்று வைகோ பேசியுள்ளார்.
மதுரை : காவிரி விவகாரத்தில் தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் எந்த அதிகாரமும் இல்லாத ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவிரியில் புதிய் அணைகள் கட்டக்கூடாது, பாதுகாப்பிற்கு மத்திய ரிசர்வ் படை வர வேண்டும், நீரை திறந்துவிடும் அதிகாரம் உள்ளிட்டவற்றில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு அதிகாரமும் இல்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் உருவாகி இருக்கிறது.
இது தமிழர்களை மீண்டும் வஞ்சிக்கும் முயற்சி. இதற்கு உடனடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்விற்கு செல்ல வேண்டும். அதை விடுத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்க வேண்டாம்.
காவிரியில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாது என்று தமிழக சட்டசபையில் முதல்வர் அறிவித்து இருப்பதும் மிகவும் மோசமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications