என்னது தமிழகத்தில் திமுக ஆட்சியா?... அது துரைமுருகனின் பகல் கனவு: விளாசும் வைகோ
தமிழகத்தில் 4 மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என துரைமுருகன் பேசியுள்ளதை வைகோ விமர்சித்துள்ளார்.
நாகர்கோவில்: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளது பகல் கனவுதான் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ சாடியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
காவிரி பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இப்படி சொல்ல அவருக்கு தகுதி இல்லை.

இதே திமுகதானே தேவகவுடா பிரதமராவதற்கு ஆதரவு தந்தது. அந்த தேவகவுடாதானே தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்க்கிறார்.
இப்போதுதான் சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ளது. அடுத்த 4 மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியிருக்கிறார்.. இது பகல் கனவுதான்...
அதுவும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்து விட்டு இப்படி திமுகவினர் பேசுவது மனிதாபிமானமே இல்லாத ஒரு செயல். இது கண்டனத்துக்குரியது.
திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை விரைவில் 92 ஆக உயரும் என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். கணித மேதை ராமானுஜரை மிஞ்சிவிட்டார் ஸ்டாலின் என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications