விவசாயத்துறையை கார்ப்பரேட் மயமாக்கும் மத்திய பட்ஜெட்!: வைகோ
சென்னை: பாரம்பரிய வேளாண்மையை அழிக்கும் வகையில் மரபணு மாற்றுப் பயிர் சாகுபடிக்கு அனுமதி அளித்துவிட்டு, இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்போம் எறு தெரிவித்துள்ளது முரணாக இருக்கிறது என்று மத்திய பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படாததால் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்துள்ள 2016-17 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவைதான் இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொருளாதார வளர்ச்சி என்பதை 8.6 எழுக்காடு இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது பொய்த்துப் போனது. பொருளாதார வளர்ச்சி 7.6 விழுக்காடு அளவுதான் எட்டப்பட்டு இருக்கிறது.
பணவீக்க விகிதம் குறைந்தாலும் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. இணையதள வர்த்தகம், முன்பேர வணிகத்தால் பருப்பு விலை மூன்று மடங்கு உயர்ந்து போனதைத் தடுக்க முடியாத மத்திய அரசு பருப்பு விலையைக் கட்டுப்படுத்த 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வது ஏமாற்று வேலை.
விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆக்கப் போகிறார்களாம். அந்த இலக்கை அடைவதற்கு முன்வைத்துள்ள திட்டங்கள் என்ன? கடந்த 13 ஆண்டுகளில் இந்தியாவில் இரண்டரை இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மோடி அரசிலும் இதே நிலைமைதான் தொடருகிறது.
விவசாயத் துறையை ‘கார்ப்பரேட் மயம்' ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கி உள்ள நிதி போதுமானது அல்ல. பாரம்பரிய வேளாண்மையை அழிக்கும் வகையில் மரபணு மாற்றுப் பயிர் சாகுபடிக்கு அனுமதி அளித்துவிட்டு, இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்போம் எறு தெரிவித்துள்ளது முரணாக இருக்கிறது.
உலக வங்கி கட்டளைக்கு அடிபணிந்து உரத்துக்கான மானியங்களை வெட்டியதால் இரசாயன உரங்களை, யூரியா விலைகள் பன்மடங்கு உயர்ந்து விட்டன. இந்நிலையில் உர மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமற்றது.
இந்திய உற்பத்தித் துறையில் பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பளித்து வரும் சிறு, குறு தொழில்துறை நலிந்து வருவதைக் காப்பாற்ற மத்திய அரசு முனைப்பான நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு தொழில் நிறுவனங்களுக்கான உற்பத்தி வரி விலக்கு வரம்பை 1.5 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருந்தால் ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், 2 கோடி ரூபாய் என்று மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிதாக சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு 3 ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு அந்நிய நிறுவனங்களுக்குச் சாதகமானது ஆகும்.
பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யவும் வங்கித் துறையை முற்றிலும் தனியார் மயமாக்கவும் தொடர் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காகவே பங்கு விலக்கல் துறையின் பெயர் "முதலீடு மற்றும் பொதுச் சொத்துத் துறை" என்று மாற்றப்படுகிறது.
பங்கு சந்தையை மையப்படுத்தியும், அந்நிய முதலீடுகளை நம்பியும் இந்தியப் பொருளாதார சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டில் 13,414 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. ஆனால், பா.ஜ.க. அரசு, அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டை விரிவுபடுத்தி வருகிறது. உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் மருந்து உற்பத்தித் துறைகளில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது.
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படாததால் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது ஏற்கக் கூடியதல்ல.
கிராமப்புற மூத்த குடிமக்களுக்குக் காப்பீடு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத் தொழில் முனைவோருக்குத் தேசிய மையம், சிறுநீரக ‘டயாலிசிÞ' இயந்திரங்களுக்கு உற்பத்தி வரி நீக்கம், நில ஆவணங்கள் மின்னணு மயமாக்குதல் போன்ற சில வரவேற்கத் தக்கவை இருந்தாலும் மத்திய வரவு-செலவு அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications