இலங்கை பிரச்சனை, ஜல்லிக்கட்டுக்கு தடை விவகாரத்தில் இரட்டை வேடம் - மத்திய அரசு மீது வைகோ பாய்ச்சல்
நெல்லை: இலங்கை பிரச்சனை மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது பேட்டியில், "வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று மதுரையில் மக்கள் நல கூட்டணி இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டில் சட்டமன்ற தேர்தலில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து தீர்மானிக்க உள்ளோம்.

மக்கள் நல கூட்டணி தமிழ்நாட்டில் திருப்பு முனையை ஏற்படுத்தும். மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் இணைந்து கடந்த 6 மாதங்களாக திட்டமிட்டு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறோம். பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். இப்படிப்பட்ட கூட்டணி தமிழகத்தில் இதுவரை அமைந்ததில்லை. தமிழகத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள். டாஸ்மாக்கை மூடாததால் இந்த அரசு கோடிக்கணக்கான தாய்மார்கள் கோபத்துடனும், வேதனையுடனும் இருக்கிறார்கள்.
வரும் தேர்தலில் அவர்கள் அந்த கோபத்தை வெளிப்டுத்துவார்கள். டாஸ்மாக் கடைக்கு எதிராக இதுவரை எத்தனையோ போராட்டங்கல் நடந்துள்ளன. டாஸ்மாக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். சசிபெருமாள் மரணத்துக்கு இந்த அரசுதான் காரணம். இது ஓரு கொலைகார அரசு. மது ஓழிப்பும், ஊழல் ஓழிப்பும் தான் எங்களது முதல் கொள்கை.
மது ஓழிப்பு, ஊழல் ஓழிப்பு போராட்டத்துக்கு எங்களது இந்த போராட்டத்துக்கு வரும் தேர்தலில் விடை கிடைக்கும். இலங்கை பிரச்சனையிலும், ஜல்லிககட்டு பிரச்சனையிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டது. மக்கள் நல கூட்டணியில் சேருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்ததற்கு இதுவரை பதில் வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications