ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு வயது வரம்பை குறைப்பதா?: வைகோ
சென்னை: அகில இந்திய குடிமைப்பணிக்காக இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், தற்போது அறிவித்துள்ள வயது வரம்பினை கைவிட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
அகில இந்திய குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற முக்கிய நிர்வாகப்பணிகளுக்கு மத்திய தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பை மத்திய அரசு குறைத்து அறிவித்ததோடு, அதனை வரும் 2015 ஆம் ஆண்டிலிருந்து அமுல்படுத்தப்போவதாகவும் முடிவு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது ஆகும்.
இன்றுவரை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வயது வரம்பு என்னவென்றால், பட்டியல் சாதி வகுப்பினரான தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 21 வயது முதல் 35 வயது வரை தேர்வு எழுதலாம் என்ற நடைமுறையை மாற்றி, இனிமேல் 29 வயது வரைதான் தேர்வு எழுத முடியும் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 21 வயது முதல் 33 வயது வரை தேர்வு எழுதலாம் என்று இருந்த நிலையை மாற்றி 28 வயது வரைதான் தேர்வு எழுதலாம் என்றும், பொதுப் பிரிவினர் 21 வயது முதல் 30 வயது வரை தேர்வு எழுதலாம் என்ற நிலையை மாற்றி, 25 வயது வரைதான் தேர்வு எழுதலாம் என்றும் மத்திய அரசு முடிவு செய்து, இதனை வரும் 2015 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்போவதாக மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இராணி அறிவித்திருக்கிறார்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அமைத்த இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் தனது பத்தாவது அறிக்கையில் இவ்விதம் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகள் எழுதுகின்றவர்களின் வயது வரம்பை குறைத்து அறிக்கை தந்தது. அது மிக மிக தவறான அணுகுமுறையாகும்.
மிகுந்த ஈடுபாட்டுடன் இரவு பகலாகப்படித்து, கடுமையாக உழைத்து தேர்வுக்கு தங்களை தயார் செய்துகொண்டு தேர்வு எழுதுகையில், தேர்வு பெறாமலும் அல்லது நேர்காணலில் வெற்றி பெறாமலும் வாய்ப்பு இழக்கும்போது மீண்டும் மீண்டும் முயன்று தேர்வில் வெற்றி பெறுவதற்கு இதுவரை இருந்த வயது வரம்பு பெரிதும் உதவியது.
குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து இந்தத்தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பயன்பெற்றனர்.சமூக நீதி கொள்கைக்கு மாறாகவும், கடுமையாக உழைத்து முயலும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் விதத்திலும் தற்போது குறைத்து அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு அமைந்துள்ளது.
எனவே இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், தற்போது அறிவித்துள்ள வயது வரம்பினை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications