ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு வயது வரம்பை குறைப்பதா?: வைகோ
சென்னை: அகில இந்திய குடிமைப்பணிக்காக இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், தற்போது அறிவித்துள்ள வயது வரம்பினை கைவிட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
அகில இந்திய குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற முக்கிய நிர்வாகப்பணிகளுக்கு மத்திய தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பை மத்திய அரசு குறைத்து அறிவித்ததோடு, அதனை வரும் 2015 ஆம் ஆண்டிலிருந்து அமுல்படுத்தப்போவதாகவும் முடிவு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது ஆகும்.
இன்றுவரை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வயது வரம்பு என்னவென்றால், பட்டியல் சாதி வகுப்பினரான தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 21 வயது முதல் 35 வயது வரை தேர்வு எழுதலாம் என்ற நடைமுறையை மாற்றி, இனிமேல் 29 வயது வரைதான் தேர்வு எழுத முடியும் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 21 வயது முதல் 33 வயது வரை தேர்வு எழுதலாம் என்று இருந்த நிலையை மாற்றி 28 வயது வரைதான் தேர்வு எழுதலாம் என்றும், பொதுப் பிரிவினர் 21 வயது முதல் 30 வயது வரை தேர்வு எழுதலாம் என்ற நிலையை மாற்றி, 25 வயது வரைதான் தேர்வு எழுதலாம் என்றும் மத்திய அரசு முடிவு செய்து, இதனை வரும் 2015 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்போவதாக மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இராணி அறிவித்திருக்கிறார்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அமைத்த இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் தனது பத்தாவது அறிக்கையில் இவ்விதம் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகள் எழுதுகின்றவர்களின் வயது வரம்பை குறைத்து அறிக்கை தந்தது. அது மிக மிக தவறான அணுகுமுறையாகும்.
மிகுந்த ஈடுபாட்டுடன் இரவு பகலாகப்படித்து, கடுமையாக உழைத்து தேர்வுக்கு தங்களை தயார் செய்துகொண்டு தேர்வு எழுதுகையில், தேர்வு பெறாமலும் அல்லது நேர்காணலில் வெற்றி பெறாமலும் வாய்ப்பு இழக்கும்போது மீண்டும் மீண்டும் முயன்று தேர்வில் வெற்றி பெறுவதற்கு இதுவரை இருந்த வயது வரம்பு பெரிதும் உதவியது.
குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து இந்தத்தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பயன்பெற்றனர்.சமூக நீதி கொள்கைக்கு மாறாகவும், கடுமையாக உழைத்து முயலும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் விதத்திலும் தற்போது குறைத்து அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு அமைந்துள்ளது.
எனவே இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், தற்போது அறிவித்துள்ள வயது வரம்பினை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications