நெஞ்சை பதற வைக்கும் கோவை விபத்து.. அதிர வைக்கும் சிசிடிவி பதிவு வெளியானது!
6 பேரை கொன்ற ஆடி காரின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றனர்.
Recommended Video

கோவை: கோவையில் இன்று நடந்த கொடூரமான சாலை விபத்து நகரையே உலுக்கி விட்டது.
ஆடி கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இந்த கோர விபத்து நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் இது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவில் சாலையோரம் நின்றிருந்த இருந்த அப்பாவி பொதுமக்கள் மீது கார் படு வேகமாக வந்த மோதும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அந்தக் காட்சிகளின் அடிப்படையில், காரை ஓட்டி வந்தது யார், காரின் உரிமையாளர் யார், என்ற விபரங்கள் தெரிய வந்துள்ளன. இந்த ஆடி கார் கோவை ரத்தினம் என்ற தனியார் கல்லூரி உரிமையாளரின் கார் என்பதும் அதன் டிரைவர் ஜெகதீசன் என்பதும் தெரியவந்துள்ளது. காரை ஓட்டி வந்த நபரை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர்.
வாகனத்தை ஓட்டி வந்த ஜெகதீசன் மதுபோதையில் இருந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் ஜெகதீசனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சிலரும் தெரிவித்துள்ளனர். எனினும் இதன் முழு உண்மை நிலவரங்கள் போலீசாரின் விசாரணையின் இறுதியிலேயே தெரியவரும்
இந்த வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications