பெரியார் சிலையில் கைவைப்பது தேன்கூட்டில் கைவைப்பதை போன்றது.. எச்.ராஜாவுக்கு வைரமுத்து பதிலடி
எச்.ராஜா பெரியார் சிலையை அகற்றுவேன் என்று கூறியது குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: எச்.ராஜா பெரியார் சிலையை அகற்றுவேன் என்று கூறியது குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்ட கருத்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
பல அரசியல் தலைவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் எச். ராஜா இந்த பதிவை நீக்கி இருக்கிறார்.
எச்.ராஜா குறித்து தற்போது வைரமுத்து கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் ''பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற எண்ணமே உடைக்கப்பட வேண்டும்.பெரியார் சிலையில் கைவைப்பது தேன்கூட்டில் கை வைப்பதை போன்றது.'' என்றுள்ளார்.
பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும்
— வைரமுத்து (@vairamuthu) March 6, 2018
என்ற எண்ணமே உடைக்கப்பட வேண்டும்.
பெரியார் சிலையில் கைவைத்தால்
தேனீக்கூட்டில் கைவைத்த கதையாகிவிடும்.#Periyar #thanthaiperiyar