பா.வளர்மதி நாகரீகமாக உரைத்த வார்த்தைகள் - சண்டாளப் பாவி, நீ, துரோகி, "ஜீரோ" பிஎஸ் (ஓபிஎஸ்)!
பா வளர்மதி தான் தரக்குறைவான, அநாகரிகமான வார்த்தைகளை பேசியதே இல்லை என்று கூறிய நிலையில் அவர் அப்போது ஓபிஎஸ் குறித்தும் இப்போது தினகரன் குறித்தும் பேசிய பேச்சு வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video

சென்னை: பா வளர்மதி தான் தரக்குறைவான, அநாகரிகமான வார்த்தைகளை பேசியதே இல்லை என்று கூறிய நிலையில் அவர் அப்போது ஓபிஎஸ் குறித்தும் இப்போது தினகரன் குறித்தும் பேசிய பேச்சு வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வளர்மதி தினகரன் அணியில் இருந்தபோது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸை சண்டாளப் பாவி என்றும் ஜீரோபிஎஸ் என்றும் விளாசியுள்ளார். டிக்கடையில் இருந்த ஓபிஎஸை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தது தினகரன் என சரமாரியாக விளாசியுள்ளார்.

அதேபோல் அண்மையில் நடைபெற்ற அதாவது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியில் இணைந்து பிறகு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வளர்மதி தினகரனை விளாசியுள்ளார். அதாவது ஜெயலலிதாவின் ரத்தத்தை குடித்த ஓநாய் கூட்டம் என சசிகலா குடும்பத்தை சாடியுள்ளார் வளர்மதி.
மேலும் எடப்பாடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என தொடர்ந்து தினகரன் கூறிவருகிறாரே அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறினாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் தினகரன் தான் துரோகத்தின் மொத்த வடிவம் என்றும் விளாசியிருக்கிறார் வளர்மதி.












Click it and Unblock the Notifications