ஹரித்துவாரில் ஆகஸ்ட் 2 ல் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்: ஹரிஷ் ராவத்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மேளா பவன் பகுதியில் ஆகஸ்ட் 2 ம் தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடந்தது.
இதையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஹரித்துவாரில் சிலை நிறுவ கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து ஹரிஷ் ராவத் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவ தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதன்படி, சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை சனிக்கிழை நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஹரிஷ் ராவத், ஹரித்துவாரில் மேளா பவன் பகுதியில் ஆகஸ்ட் 2 ம் தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார். மேலும், சிலை நிறுவப்படும் பூங்கா 'திருள்ளுவர் பூங்கா' என அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications