ஒரு நாடகத்தின் இரு நடிகர்கள்!
-வன்னி அரசு
விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க அவசியம் இல்லை. சிபிசிஐடி விசாரணையே போதும் என்று முதல்வர் ஜெயல்லிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
டிஎஸ்பி விஷ்ணு பிரியா மரணம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் முதல்வர் ஒரு அஞ்சலி கூட செலுத்தவில்லை. சட்டப்பேரவையில் திமுக, இடது சாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விஷ்ணுபிரியா மரணத்தில் சந்தேகம் இருப்பதை கேள்வி எழுப்ப முயன்ற போதும் முதல்வர் ஜெயலலிதா அசைந்து கொடுக்கவில்லை.

வழக்கம்போல சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் காவல்துறை மிக மோசமான நிலையில உள்ளதென எல்லோரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். முன்னாள் டிஜிபி திலகவதி கூட, சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் காவல்துறையில் சாதியம் இருப்பதாகவும் குற்றம் சுமத்தி உள்ளார். இதே போல ஜான் நிக்கல்சன் என்கிற முன்னாள் காவல்துறை அதிகாரியும் தமிழக காவல்துறை செயலிழந்துவிட்டதாக குற்றம் சுமத்தி உள்ளார்.
இந்த சந்தடி சாக்கில் விஷ்ணுபிரியாவுக்காக பேசும் திமுக தலைவர் கருணாநிதி மறந்தும் கூட படுகொலையான கோகுல்ராஜ் குறித்தோ, தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் குறித்தோ அவரது கும்பலிடமிருந்து விஷ்ணுபிரியாவுக்கு மிரட்டல் இருந்து வந்தது பற்றியோ இதுவரை வாய் திறக்கவில்லை என்பதையும் மிக கவனமாக பார்க்க வேண்டும்.
ஆனால், நம் முதல்வரோ அட்டாக் பாண்டியை கைது செய்து கொண்டு வந்து விட்டார்கள் என்று தமிழக காவல்துறையை சட்டப்பேரவையில் புகழ்ந்து தள்ளிவிட்டார். அத்தனை புகழச்சிக்கும் காரணம் அந்த துறைக்கும் முதல்வர் அமைச்சராக இருப்பதாலோ என்னவோ.
ஆனால் ராமஜெயம், வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஸ் படுகொலைகள் தொடர்பாக இதுவரை எந்த துப்பும் துலக்காத காவல்துறை குறித்து முதல்வர் என்ன சொல்லப் போகிறார்?
இரண்டாண்டுகளாக அட்டாக் பாண்டியை பிடிக்க முடியாமல் போனது காவல் துறைக்கே அவமானம் இல்லையா? காவல்துறைக்கே சவால் விடும் யுவராஜை பற்றி காவல்துறையை தனக்கு கீழ் வைத்திருக்கும் முதல்வரின் பதில் என்ன? யுவராஜைப் பற்றி பேச கருணாநிதி ஏன் தவிர்க்கிறார்?

விஷ்ணுப்ரியா தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறக்காமல் வேறு சாதியில் பிறந்திருந்தால் அதற்கு நேரம் ஒதுக்கி பதில் சொல்லி இருப்பார்களோ நம் அரசியல்வாதிகள். முதல்வரும் சிபிஐ விசாரணை அறிவித்திருப்பாரோ? அமைச்சர்களை அனுப்பி அஞ்சலி செலுத்தி இருப்பாரோ?
பாவம் தலித் சமூகத்தில் பிறந்து, சொத்து சேர்க்க ஆசைபடாமல் மக்களுக்காக நேர்மையாக செயல்பட்ட விஷ்ணுபிரியாவின் மரணம் படுகொலையாக இருந்தாலும் அது இந்த அரசுக்கு ஒரு வெறும் தற்கொலை செய்தியாகவே தெரிகிறது. அந்தளவிற்கு சாதிய பார்வையோடு செயல்படுகின்றன அரசியல் கட்சிகளும் அரசும்.
தமிழகத்தில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல். காவல்துறையை மறு சீரமைக்க வேண்டிய கட்டாயமான சூழல் நிலவுகிறது.
(வன்னி அரசு தேர்ந்த பத்திரிகையாளர். இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications