வெள்ளம் வடிந்த பிறகு என்ன செய்யணும், செய்யக் கூடாது: தமிழக அரசு அறிவுரை
சென்னை: வெள்ளம் வடிந்த பிறகு செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது குறித்து தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

* பாதுகாப்பான நிலை திரும்பும் வரை வெள்ளம் வடிந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்.
* வெள்ளம் வடிந்த பின்னரும் ஆற்றங்கரைக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும்.
* வெள்ளம் புகுந்த கட்டிடத்துக்குள் செல்லும் முன், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும். நுழையும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
* கட்டிடத்தை சுற்றியோ, கட்டிடத்தின் உள்ளேயோ வெள்ள நீர் இருந்தால் உள்ளே நுழையக்கூடாது.
* கட்டிடத்தில் விரிசல், சேதம் உள்ளதா என்பதையும் அனைத்து சுவர், தரைப் பகுதிகள், மேற்கூரை, ஜன்னல் ஆகியவற்றையும் ஆய்வு செய்யவும்.
* கட்டிடத்துக்குள் உள்ள மின் இணைப்புகள், தரையில் இருக்கும் அடுப்புகள், கொதிகலன்கள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் மோட்டார் பம்பு போன்ற இதர மின் உபகரணங்களை முறையாக சோதனை செய்ய வேண்டும்.
* வடிகால் அமைப்பில் உடைப்பு ஏற்பட்டு இருந்தால், கழிப்பறை மற்றும் தண்ணீர் உபயோகத்தை நிறுத்திவிட வேண்டும்.
* வெள்ள நீரில் நனைந்த மருந்துகள், உணவு, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள் மற்றும் தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
* மின் உபகரணங்களில் சேதம் ஏற்பட்டிருந்தால் மின் இணைப்பை உடனே துண்டிக்க வேண்டும்.
* கொதிக்க வைத்து, குளோரின் கலந்த பாதுகாப்பான நீரை பருகவும்.
* பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான பாதைகளையே உபயோகிக்கவும்.
* தாழ்வான மின் கம்பிகள் அருகே செல்லக் கூடாது.
* சிறிய காயங்களையோ, நோய் அறிகுறிகளையோ அலட்சியப்படுத்தக் கூடாது. தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக நாடவும்.
* வெள்ளம் வந்த வீடுகளில் மீண்டும் காஸ் அடுப்புகளை பயன்படுத்தும் போது கவனம் தேவை.
* வெள்ளப் பகுதியில் குழந்தைகள் விளையாட தடை விதிக்க வேண்டும்.
* வெள்ள நீரில் நனைந்த அனைத்து பொருட்களையும் சுத்தப்படுத்தியும், தேவை எனில் கிருமி நீக்கியும் பயன்படுத்தவும்.
* மின் உபகரணங்களை, வெள்ளம் பாதிக்கும் வாய்ப்புள்ள உயரத்துக்கு மேலாக பொருத்தி வைக்கவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications