'வர்தா' என்றால் சிவப்பு ரோஜாவாம்... 'பாகிஸ்தான்' வைத்த பெயர்...
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'வர்தா' புயலுக்கு தமிழில் சிகப்பு ரோஜா என்று அர்த்தம். இந்தப் பெயரை பாகிஸ்தான் சூட்டியுள்ளது.
சென்னை: சென்னையை தாக்குவதற்காக வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் வர்தா புயலுக்கு தமிழில் சிகப்பு ரோஜா என்று அர்த்தமாம். இந்த பெயரை நமது அண்டை நாடான பாகிஸ்தான் சூட்டியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல் சென்னையை தாக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய பலத்த காற்று வீசி வருகிறது. கனமழையும் கொட்டி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர்.
மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயலின் பெயர் குறித்த சுவாரசிய தகவல்கள் சில வெளியாகியாயுள்ளன. வர்தா என்பதன் அர்த்தம், அந்தப் பெயர் எந்த மொழியை சேர்ந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
வர்தா என்றால் சிகப்பு ரோஜா
சென்னை கடக்க காத்துக் கொண்டிருக்கும் புயலின் பெயர் வர்தா. வர்தா என்றால் சிகப்பு ரோஜா என்று அர்ததமாம்.
யார் வைத்த பெயர்
வர்தா என்பது ஒரு உருது சொல் ஆகும். இந்தப் பெயரை புயலுக்கு சூட்டியது நமது அண்டை நாடான பாகிஸ்தான் ஆகும்.
பெயர் வைக்கும் நாடுகள்
இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு 8 நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டுகின்றன. அவை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு , ஓமன் மற்றும் பாகிஸ்தான் ஆகும்.
நாடா புயலுக்கு யார் பெயர் வைத்தது
அண்மையில் தமிழகத்தை தாக்குவதாக மிரட்டி வந்த தடம் தெரியாமல் சென்ற நாடா புயலுக்கு ஓமன் நாடு பெயர் சூட்டியது. நாடா என்றால் தமிழில் பெருந்தன்மை என்று அர்த்தம்.