முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் மகனுக்கு டெண்டர் கொடுத்து கீதாலட்சுமி பலகோடி ஊழல்
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் மகன் விவேக்கிற்கு டெண்டர் கொடுத்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பலகோடி ரூபாய் ஊழல் செய்தது அம்பலமாகியுள்ளது.
சென்னை: மருத்துவமனைகளை சுத்தம் செய்வது தொடர்பான டெண்டர் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் மகனுக்கு கிடைப்பதில் கீதாலட்சுமிக்கும் ராமமோகன் ராவ்விற்கும் இடையே கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருக்கிறது.
எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் கீதாலட்சுமியின் வீட்டை இன்று வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.
மருத்துவ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை நியமனம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அதுமல்லாமல் மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய கட்டடிம் கட்டுவது உள்ளிட்ட பல திட்டங்களில் கோடி கணக்கான ரூபாய் கீதாலட்சுமியிடம் கைமாறியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் மகனுக்கு டெண்டர் ஒன்று கீதாலட்சுமி வழங்கி இருக்கிறார். அதில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்து மருத்துவமனைகளையும் சுத்தப்படுத்தும் பணியை ராமமோகன் ராவ் மகன் டெண்டர் எடுத்திருக்கிறார்.
இதற்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் கீதாலட்சுமி செய்து டெண்டரை அவருக்கே கிடைக்க வழிவகை செய்துள்ளார். இதில் கோடிக்கணக்கில் ரூபாய் கைமாறி இருக்கிறது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.