என் தலையின் மதிப்பு 7 லட்சமாக உயர்வு... வாட்ஸ் அப் மிரட்டல் குறித்து திருமா!
சென்னை: எனது தலையின் மதிப்பு ரூ.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் செய்தி ஒன்று உலா வருகிறது. ஆனால், இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
திருச்சி கண்டோன்மெண்ட் அருகே உள்ள கற்பக ரட்சகி மகாலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைக்கப்பட்ட மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் கடந்த சனிக்கிழமையன்று மதுஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது.
அதில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாட்ஸ் அப்பில் பேரம்...
திருமாவளனை கொல்ல வேண்டும், தலையை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் 7 லட்சம் என ஒரு கும்பல் வாட்ஸ் ஆப்பில் செய்தி பரப்பி வருகிறது. 10 வருடங்களுக்கு முன்னால் என் தலைக்கு 5 லட்சம் என இதே போல் மிரட்டல் வந்தது. தற்போது அது 7 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால், இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயந்துவிடவில்லை.

அநாகரீகமாக பேசுபவன் இல்லை...
அரசியல் வாழ்க்கையில் சமரசம் இல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையாக ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காக உழைக்கிறேன். ஒரு இடத்திலும் கூட அநாகரிகமாகவோ, வார்த்தை தடித்தோ பேசியதில்லை. சிலர் பொது மேடைகளில் தலையை எடுப்பேன், வெட்டுவேன், குத்துவேன் என பேசியிருக்கிறார்கள். அப்படி நான் பேசியதாக ஏதாவது பதிவுகள் உண்டா?

யுவராஜ் வீரனா?
பொறியாளர் கோகுல்ராஜை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த யுவராஜ் வீரன் என்கிறார். தமிழ்நாட்டில் ஓடி ஒழிந்தவன், தலைமறைவாக கரும்புக்காட்டில் பதுங்கியிருந்தவன், அடுத்த கட்சியின் கொடியறுக்கவே தலைமறைவாக இருத்தவன் எல்லாம் இப்போது வீரன், மாவீரன் என தனது பேருக்கு பின்னால் போட்டுக்கொண்டு திரிகிறார்கள். அப்படி மாவீரன் என போட்டுக்கொள்பவர்களை கண்டு பயப்படவேண்டியதில்லை.

தலித் பகுதிகளில் அதிக டாஸ்மாக்....
சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் தலித் மக்கள் வாழும் பகுதிகள் அதிகமாக டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்து இந்த சமூகத்தை குடிகாரர்களாக்கி விட்டார்கள். இதை தடுக்க வேண்டும்.

மகளிர் மதுஒழிப்பு மாநாடு...
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் பிரசாரங்கள் நடத்தினோம். அதன் ஒருபகுதியாக இந்த மகளிர் மதுஒழிப்பு மாநாடு. இதை நடத்தும் நமது கட்சியினர் முதலில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

தேசிய மதுக்கொள்கை...
இளைஞர்களை மதுப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய அளவிலான மதுக் கொள்கையை உருவாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே மது எனும் அரக்கனிடமிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும்.

போருக்கும் தயார்...
அதேபோல் தமிழக அரசு வரும் டிசம்பருக்குள் அரசு மதுபான கடைகளை மூட வேண்டும். இல்லையென்றால் தேர்தல் அரசியலை பற்றி கவலைப்படாமல், மக்களுக்காக மதுக்கடைகளை மூடும் போருக்கும் தயாராக இருக்கிறோம்.

மக்கள் கூட்டியக்கம்...
மக்கள் கூட்டியக்கத்தை உருவாக்கியுள்ளோம். இதை எல்லோரும் பலவிதமாக பேசுகிறார்கள். எள்ளி நகையாடுகிறார்கள். நிச்சயம் மக்கள் கூட்டியக்கம் தமிழகத்தில் மாற்றத்திற்கான அரசியல் பாதையை உருவாக்கும்'' என இவ்வாறு அவர் பேசினார்.
-
தமிழகம் + புதுச்சேரி.. 10 தொகுதிகள் ஒதுக்குங்க.. ஸ்டாலினை வீட்டில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை! -
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications