தமிழரே தமிழரை ஆளும் கோரிக்கைக்காக நாடாளுமன்றம் முன்பு தீக்குளிக்க தயாரா? சீமானுக்கு வீரலட்சுமி சவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு தீக்குளிக்கும் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வர தயாரா? என்று தமிழர் முன்னேற்றப் படையின் தலைவி வீரலட்சுமி சவால் விடுத்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சித் தலைவர் சீமான் கடலூரில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

Veeralakshmi challenges Seeman

தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவி கி. வீரலட்சுமி அண்மையில் வைகோவை நேரில் சந்தித்து மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தம்முடைய முகநூலில் வீரலட்சுமி சீமானுக்கு சவால்விடுத்து ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக சீமானும் தமிழர் முன்னேற்றப்படை சார்பாக நானும் இந்திய நாடாளுமன்றம் முன்பாக தீ குளிக்கும் போராட்டம்.

நான் தயார் சீமான் வருவாரா?

இப்போராட்டத்தின் முடிவில் யார் உண்மையான போராளி என்று மக்கள் தேர்வு செய்யட்டும்.

2016,சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி வீழ்த்த வேண்டிய எதிரி அஇஅதிமுகவின் ஒட்டுன்னி கட்சிகளும் அல்ல அதன் தலைவர்களும் அல்ல. அஇஅதிமுக கட்சி மட்டும் தான். அஇஅதிமுகவை வீழ்த்திவிட்டால் ஒட்டுன்னிகள் தானாக வீழ்ந்து விடும்.

என வீரலட்சுமி பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+