நோட்டாவுக்கு போன 5 லட்சம் ஓட்டும் ம.ந.கூவுக்கானது... அடித்து சொல்லும் வீரலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நோட்டாவுக்கு விழுந்த 5 லட்சம் வாக்குகளுமே மக்கள் நலக் கூட்டணிக்கு கிடைக்க வேண்டியது..அதனால் நோட்டா பட்டனையே நீக்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி வலியுறுத்தியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப் படை கட்சியும் இடம்பெற்றது. பல்லாவரம் தொகுதியில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் வீரலட்சுமி போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

Veeralakshmi demands to remove NOTA

அத்தொகுதியில் 14,083 வாக்குகள் வாங்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் வீரலட்சுமி. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர்,

நான்தான் வெற்றி வேட்பாளராக வந்திருக்க வேண்டியது. எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க. கடைசி நாளில் பணத்தை வாரிக் கொடுத்தாங்க. நீங்களே சொல்லுங்கண்ணே...வீட்டுக்கு 5 ஆயிரம், எட்டாயிரம்னு கொடுத்தால், மக்கள் யாருக்கு ஓட்டுப் போடுவாங்க?

வரும் தேர்தல்ல நோட்டா பட்டனை நீக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கணும். அந்த அஞ்சு லட்சம் ஓட்டும் எங்களுக்கு வர வேண்டியது. தேவையில்லாம நோட்டா பட்டனை வச்சு கெடுத்துட்டாங்க என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+