திமுகவுடன் எங்களுக்கு தோழமையோ, கூட்டணியோ கிடையாது.. கி.வீரமணி
திமுகவுடன், திமுகவுக்கு இருப்பது தோழமையோ, கூட்டணியோ கிடையாது. எங்களுக்குள் இருப்பது உறவுமுறை என கி.வீரமணி தெரிவித்தார்.
சென்னை: திமுகவோடு, திராவிடர் கழகம் தோளோடு தோள் நிற்கும் என்று பேட்டியளித்துள்ளார் அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி.
சட்டசபையில் சமீபத்தில் நடைபெற்ற அமளியின்போது திமுக நடந்து கொண்ட விதம் சரியில்லை என்று கூறி அக்கட்சியினருக்கு ஷாக் கொடுத்தார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.

ஏற்கனவே இவர் சசிகலாவுக்கு ஆதரவாகவும் பல கருத்துக்களை தெரிவித்திருந்ததால், திமுக-திராவிடர் கழகம் நடுவே விரிசல் என பேச்சு உலவியது.
திராவிடர் கழகம்தான், திமுகவின் தாய் அமைப்பு என்பதால் இந்த விரிசல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கி.வீரமணி இன்று ஒரு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுகவுடன், திமுகவுக்கு இருப்பது தோழமையோ, கூட்டணியோ கிடையாது. எங்களுக்குள் இருப்பது உறவுமுறை. உறவை யாராலும் பிரிக்க முடியாது. தற்போது திமுகவின் ஸ்டாலின் சோதனையான ஒரு காலகட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு வருகிறார். அவர் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வீரமணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications