"கமர்ஷியல் ஹீரோ" ஆன வெள்ளையன்...!
சென்னை: ஆசை யாரை விட்டது.. அதுவும் விளம்பர ஆசை யாரையுமே விடாது. விதம் விதமான கெட்டப்களில் திரைகளைக் கலக்கும் நாயகர்களைப் போல போட்டோஷாப் செய்து தங்களது அபிமானத் தலைவர்களின் படங்களை போஸ்டரில் போடும் தொண்டர்களைப் போல, தமிழக வணிகர் சங்கத்தினரும் களம் இறங்கிக் கலக்கியுள்ளனர்.
இது சாதா கலக்கல் இல்லை "கமர்ஷியல்" கலக்கல். தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 5ம் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படும். அன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும். மேலும் ஏதாவது ஒரு ஊரில் வர்த்தகர்கள் மாநாடு நடத்துவர். முன்பு ஒரே சங்கமாக இருந்தது. இன்று இரண்டாக பிளவுபட்டிருக்கிறார்கள் வணிகர்கள். ஒரு பிரிவு வெள்ளையன் தலைமையிலும், இன்னொரு பிரிவு விக்கிரமராஜா தலைமையிலும் இயங்கி வருகிறது.

இந்த நிலயைில் வெள்ளையன் தலைமையிலான அமைப்பினர் தஞ்சாவூரில் மே 5ம் தேதி உள்நாட்டு தொழில் வணிக பாதுகாப்பு மாநாட்டை நடத்துகிறது. இதற்காக தஞ்சைக்குத் திரண்டு வருமாறு கூறி தமிழகம் முழுவதும் போஸ்டர்கள், பிட் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர்.
அப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில் ஒன்று நமது கண்களைக் கவருவதாக இருந்தது. வெள்ளையனை ஒரு "போலீஸ்கார்" வேடத்தில் போட்டோஷாப் செய்து இந்த போஸ்டரில் போட்டுள்ளனர்.
பார்க்க ரொம்ப வித்தியாசமாக இருந்தது. இப்போதுதான் முதல் முறையாக வெள்ளையனை இப்படி வித்தியாசமான கெட்டப்பில் பார்க்கிறார்கள் வணிகர்களும்.
பாதுகாப்பு மாநாடு என்பதால் போலீஸ் வேடம் போட்டு விட்டார்களா வெள்ளையனுக்கு?












Click it and Unblock the Notifications