ஏன் +2 தேர்வில் வேலூருக்குக் கடைசி இடம்? - காரணத்தை விளக்கும் கவிஞர் சுகிர்த ராணி
வேலூர் மாவட்டத்தில் முதல்தலைமுறை மாணவர்கள் அதிகம் இருப்பதால் பனிரெண்டாம் பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவிகிதம் குறைவு என கவிஞரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான சுகிர்தராணி தெரிவித்துள்ளார்.
வேலூர்: பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. அதில், வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது என்று செய்திகள் வெளியானது. அதற்கு தமிழாசிரியராகப் பணிபுரியும் கவிஞர் சுகிர்தராணி கிராமப்புறங்கள் நிறைந்தது வேலூர் மாவட்டம். ஆகவே தான் கடைசி இடம் என தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 9.3 லட்சம் மாணவ, மாணவியர் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதினர். அதன் முடிவுகள் இன்று காலை வெளியானது.
அதில் விருதுநகர் மாவட்டத்தில் 97.85 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து அம்மாவட்டம் முதலிடத்தை பிடித்தது. வேலூர் மாவட்டம் 84.99 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

சுகிர்த ராணி
இந்த செய்தி ஊடகங்களில் வெளியானவுடன், வேலூர் ராணிப்பேட்டையில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் கவிஞர் சுகிர்தராணி தன் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

பின்தங்கிய வேலூர்
வேலூர் மிகவும் பின் தங்கிய மாவட்டம். விவசாயம் தான் பிரதான தொழில். இங்கு படிக்க வருபவர்களில்பெரும்பான்மையோர் முதல்தலைமுறை மாணவர்கள். அதனால் தான் தேர்ச்சி சதவிகிதம் குறைந்து கடைசி இடம் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட வாரி லிஸ்ட்டுக்கும் எதிர்ப்பு
மேலும், ப்ளஸ் டூ பொதுத் தேர்வு முடிவில் ரேங்க் பட்டியல் நடைமுறையை கைவிட்டதுபோல, மாவட்டவாரியாக தேர்ச்சிச் சதவீதப் பட்டியல் நடைமுறையையும் அரசு கைவிட வேண்டும். தேர்ச்சிச் சதவீதத்தில் பின்தங்குவதற்குச் சமூகப் பொருளாதார அரசியல் காரணிகள் பல உள்ளன.

அரசுக்கு வேண்டுகோள்
அவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் தேர்ச்சிச் சதவீத அடிப்படையில் முதலிடம், கடைசியென மாவட்டங்களைப் பட்டியலிடுவதைப் பற்றியும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நியாயமான கோரிக்கைதானே!
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications