அதிகாலையில் குளிர்… பகலில் சதமடிக்கும் வெயில்… வியர்க்கும் வேலூர்வாசிகள்
வேலூர்: வேலூரில் வெயில் சதமடித்துள்ளதால் நகரவாசிகள் புழுக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அதிகாலையில் கடுங்குளில், பகலில் கொளுத்தும் வெயில் என மாறி மாறி சீதோஷ்ணநிலை பரவிவருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வெயிலூரான வேலூரில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வேலூர் மாவட்டத்தில் சில நாட்களாக 95 டிகிரி வெயில் கொளுத்தி வந்தது.

மாறும் சீதோஷ்ணம்
கடந்த சில நாட்களாக வேலூரில் வித்தியாசமான சீதோஷ்ண நிலை ஏற்பட்டு வருகிறது. காலை நேரங்களில் அதிகமான குளிரும், பகலில் வெயிலும் சுட்டெரித்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக காலை முதலே வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

சதமடித்த வெயில்
நேற்றைய தினம் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த ஆண்டு அதனையும் தாண்டும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோடையை சமாளிக்க
பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் வேலூரில் எங்கு பார்த்தாலும் சாலையோர பழக்கடைகள் முளைத்துள்ளன.

சென்னையில் வெயில்
95 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் தொடும் நிலை நிலவுகிறது. இதனால் பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியில் வரத் இப்போதே தயங்குன்றனர்.

114 டிகிரியை தொடும்
கோடை காலம் முடிய 3 மாதங்களுக்கு மேல் இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். குறிப்பாக கத்திரி வெயிலின் போது அதிகபட்சமாக 114 டிகிரியை எட்டும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications