காவிரி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடி வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்- வேல்முருகன் கைது
மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடினர்.
Recommended Video

உளுந்தூர்பேட்டை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அந்த சுங்கச்சாவடியைச் சூறையாடினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காவிரி குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு உத்தரவிட்டும், அதற்கான ஆறு வார கால அவகாசம் முடிந்து மத்திய அரசு அதைச் செயல்படுத்தவில்லை.

இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள், மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமையாததைக் கண்டித்தும், சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை எதிர்த்தும் ஏப்ரல் 1ம் தேதி சுங்கச்சாவடிகள் முற்றுகைப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

அதன்படி, இன்று காலை 11 மணியளவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது, மத்திய அரசுக்கு எதிராகக் கோஷமிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், அங்கு டோல்கேட் கட்டணம் செலுத்த மறுத்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.

இதனையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications