கூட்டாட்சிக்கு எதிரானது ஜிஎஸ்டி.. வரவேற்கும் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.. வேல்முருகன் வார்னிங்

மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி முறைக்கே எதிரானது ஜிஎஸ்டி என்றும், இதை வரவேற்கும் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி அறிமுகத்திற்கும் அதனை வரவேற்றுள்ள துரோகத்திற்கும் மன்னிப்பே கிடையாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களாட்சி - ஜனநாயகம் என்பது என்ன? எண்ணிக்கை பலமா அல்லது எண்ண பலமா? அல்ல; மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதுதான் மக்களாட்சி - ஜனநாயகம். மனிதர் பிற மனிதரை ஆளுதல் அல்ல, மதித்தல் என்பதுதான் இதன் பொருள்.

நேர் எதிர் செயல்பாடு

நேர் எதிர் செயல்பாடு

ஆனால் மக்களாட்சியின் பெயரால் அதற்கு நேர் எதிராகவே செயல்பட்டு வருகிறது நடுவண் அரசு. அத்தகைய ஓர் உச்ச நடவடிக்கைதான் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வந்திருப்பதாகும்.

பாதுகாப்பு, அயலுறவு போதும்..

பாதுகாப்பு, அயலுறவு போதும்..

பாதுகாப்பு, ரூபாய்-நாணயம் அச்சிடல், அயலுறவு ஆகிய இம்மூன்று துறைகளுக்கு மேல் நிர்வகிக்கும் அவசியம் நடுவண் அரசுக்கு இல்லை என்பதுதான் உண்மை. இதற்குத் தேவையான அளவு நிதியை மாநிலங்களிடம் அது பெற்றுக் கொள்வதுதான் முறை என்பதுவும் உண்மை.

பாதுகாப்பு, அயலுறவு போதும்..

பாதுகாப்பு, அயலுறவு போதும்..

பாதுகாப்பு, ரூபாய்-நாணயம் அச்சிடல், அயலுறவு ஆகிய இம்மூன்று துறைகளுக்கு மேல் நிர்வகிக்கும் அவசியம் நடுவண் அரசுக்கு இல்லை என்பதுதான் உண்மை. இதற்குத் தேவையான அளவு நிதியை மாநிலங்களிடம் அது பெற்றுக் கொள்வதுதான் முறை என்பதுவும் உண்மை.

மாநில அதிகாரத்தை பறிக்கும் ஜிஎஸ்டி

மாநில அதிகாரத்தை பறிக்கும் ஜிஎஸ்டி

ஆனால் ஏற்கனவே மாநிலங்களுக்கு, மத்திய அரசுக்கு என்று இருந்த அதிகார வரம்பினையும் உடைத்து அனைத்து அதிகாரங்களையும் பறித்து தன்னகத்தே குவிக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கையாள்கிறது நடுவண் அரசு. அதன் உச்சமான ஒரு நடவடிக்கைதான் ஜிஎஸ்டி!

நள்ளிரவில் ஜிஎஸ்டி

நள்ளிரவில் ஜிஎஸ்டி

திருவிழாக் கொண்டாட்டம் போல் நள்ளிரவு நேரம் பார்த்து ஜிஎஸ்டி பறைசாற்றம் செய்யப்பட்டது. ஊடகங்கள் மூலம் ஜிஎஸ்டிக்கு பெரிதான ஒரு சித்திரமும் படைக்கப்படுகிறது.

மோடியின் சித்து வேலை

மோடியின் சித்து வேலை

இதெல்லாம் மோடியின் வழக்கமான சித்து வேலைகள்! பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கி பிரச்சனையின் தாக்கத்தை மறைத்துவிடப் பார்ப்பதுதான் அவர் பின்பற்றும் ஒரே கொள்கை; அவருக்குத் தெரிந்த ஒரே உத்தி. இப்படித்தான் அவர் மக்களை ஏய்த்து வருகிறார்.

சப்பைக்கட்டும் முதல்வர்

சப்பைக்கட்டும் முதல்வர்

ஆனால் இதனை வலிந்து வழிமொழிகிறாரே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அது ஏன் என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி. சிறு, குறு தொழில்-வணிகம் ஜிஎஸ்டியால் காணாமலே போய்விடும் என்ற அச்சத்தில் போராட்டம் நடப்பது ஒருபுறமென்றால், "ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பில்லை" என்று சப்பைக்கட்டுக் கட்டுகிறார் முதல்வர்.

அடிமையான மாநில அரசு

அடிமையான மாநில அரசு

கூட்டாட்சி முறைக்கே எதிராக மாநில உரிமையை ஜிஎஸ்டி மூலம் பறித்திருப்பதுகூட நம் முதல்வருக்குத் தட்டுப்படவில்லையே? அரசு என்ற அமைப்பின் மிக உயர்ந்த அதிகாரமே வரி விதிப்புதான். வரியை வைத்துத்தான் அரசு! அரசு தோன்றிய ஆதிகாலம் தொட்டே இதுதான் நடை முறை. கலெக்டர் என்று சொல்கிறோமே, வரி வசூல் செய்பவர் என்பதுதான் அதன் உட்பொருள். வரி விதிப்பு உரிமை இல்லாததற்குப் பெயர் அரசு அல்ல. அடிமை என்பதுதான் உண்மை.

வரலாறு மன்னிக்காது

வரலாறு மன்னிக்காது

ஏற்கனவே முகாமையான உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு அடிமையாய் இருக்கும் தமிழகம் ஜிஎஸ்டி மூலம் கொத்தடிமையாகவே ஆக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய உறுத்தலே இல்லாமல் இருக்கும் ஆட்சியாளர்களை வரலாறு மன்னிக்காது என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+