ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வேல்முருகன் சென்னையில் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் வேல்முரு
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரி சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 நாட்களாக தொடர்ந்து பேரெழுச்சியுடன் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகள், விவசாயி அமைப்பினர், அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.

மக்களின் இந்த உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்திருந்தது.
ஆனால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தாம்பரம் விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளதால் காவல் துறை முற்றுகைப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மட்டும் நடைபெறும் என்று வேல்முருகன் அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை சேப்பாக்கத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications