ஜல்லிக்கட்டு 'லோக்கல்' பிரச்சினை... சொல்வது வெங்கையா!
சென்னை: ஜல்லிக்கட்டு என்பது தேசியப் பிரச்சினை அல்ல, மாநில அளவிலான சிறிய பிரச்சினை. இதற்கு நான் கருத்துக் கூற தேவைில்லை என்று பேசியுள்ளார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு.
ஒரு காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இந்தியாவுக்கு வரவழைக்க மத்திய அரசின் சுற்றுலாத்துறை ஜல்லிக்கட்டுப் படங்களை தனது பிரவுச்சர்களில் போட்டு பிரபலப்படுத்திய காலம் இப்போது போய் விட்டது. தமிழக அரசும், தமிழக மக்களும், பல்வேறு கட்சிகளும் மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை, ஜல்லிக்கட்டை நடத்தத் தேவையான அவரச் சட்டத்தையும் அது பிரயோகிக்கவில்லை. மாறாக வாயை மூடிக் கொண்டு அமைதியாகி விட்டது.
இந்த நிலையில் மத்திய அமைச்சரான மேனகா காந்தி, ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டே இல்லை என்று கூறி விட்டார். இன்று வெங்கையாவும் வேற மாதிரி அதன் முக்கியத்துவத்தை கீழிறக்கியுள்ளார். அவரைப் பொறுத்தவரை இது ஒரு சிறிய பிரச்சினையாம்.
சென்னை வந்த வெங்கையா இதுகுறித்து கூறுகையி்ல், ஜல்லிக்கட்டு போட்டி குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஒரு மாநிலத்தில் உள்ள சிறிய பிரச்சனை இது. இதற்கு தேசிய அளவில் நான் கருத்து கூற தேவையில்லை. இதை தமிழகத்தில் உள்ள தலைவர்களே பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்று பேசியுள்ளார் வெங்கையா.
அது சரி!