மணல் குவாரிகளுக்கு தடை தொடரும்.. நீதிபதிகள் உத்தரவு!

மணல் குவாரிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மணல் குவாரிகள் மீதான தடை தொடரும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடும்படி உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்காக நீதிமன்றம் 6 மாத காலம் அவகாசம் கொடுத்து இருந்தது.

Verdict on sand quarries case in HC bench

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் மணல் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த ஒருமாதமாக நடந்தது. தமிழக அரசின் வாதத்தை நீதிபதிகள் கேட்டறிந்தனர். மேலும் தமிழ்நாட்டில் நிலவும் மணல் தட்டுப்பாடு குறித்தும் இந்த வழக்கில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. நீதிபதிகள் கல்யாண சுந்தரம் மற்றும் கிருஷ்ணவள்ளி அமர்வு மணல் குவாரிகள் மீதான தடை தொடரும் என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+