இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்: திருச்சியில் தொகாடியா 'திகில்' முழக்கம்!
திருச்சி: இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன்பாய் தொகாடியா திகில் முழக்கம் எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொன்விழா ஆண்டு திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகே நேற்று இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் அகில உலக செயல் தலைவர் பிரவீன்பாய் தொகாடியா ஆற்றிய சிறப்புரை:
அயோத்தியில் ராமர்கோயில் கட்டி முடிக்கும்போதுதான் நாங்கள் பொன்விழாவைக் கொண்டாட உள்ளோம். 14ஆம் நூற்றாண்டுக்கு முன்பு முஸ்லிம்கள் இல்லை. 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவர்கள் இல்லை.

மெக்காவிலும், மதினாவிலும், ஜெருசலேத்திலும் பள்ளிவாசல்களும், தேவாலயங்களும் இல்லை. உலகெங்கும் இந்துக்கள்தான் இருந்திருக்கின்றனர். ஆனால் இன்றைய நிலை என்ன என்பதை நாம் உணர வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25-ன்படி சொந்த மதத்தை பிரசாரம் செய்ய முழு உரிமை உள்ளது. ஆனால், அதை சிலர் மதமாற்றம் செய்வதற்கான உரிமை என்றுக் கருதி பேசி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் மதமாற்றத்தை தடை செய்யும் வகையிலான சட்டத்தை அரசு நிறைவேற்றிட வேண்டும்.
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 3 கோடி வங்கதேசத்தவர்களை வெளியேற்றிட வேண்டும். இல்லையெனில் அவர்கள் நாளை சென்னை, டெல்லியை ஆக்கிரமித்துவிடுவர். ஜெருசலம் செல்வதற்கும், மக்காவிற்கு செல்வதற்கும் நிதியுதவியை அளிக்கும் அரசுகள், இந்துக்கள் திருப்பதி சென்று வருவதற்கு ஒரு ரூபாய் கூட உதவி செய்வதில்லை.
இந்துக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். இந்திய அரசியல் சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு தொகாடியா பேசினார்.
சர்ச்சை
இதனிடையே ஶ்ரீரங்கத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் திருச்சியில் திறந்தவெளி மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்கியது எப்படி என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications