ஜல்லிக்கட்டு வன்முறை.. விசாரிக்க மதுரை பக்கம் எட்டிக் கூட பார்க்கலையாம் நீதிபதி ராஜேஷ்வரன்
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் உருவான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் மதுரைக்கு செல்லவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்
சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட நூற்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக மதுரையில் காத்திருக்கும் நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தங்களை விசாரிக்கவில்லை என்று மதுரையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நீதிபதி ராஜேஷ்வரன் ஒரு நபர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், மதுரைக்கு நேரடியாக வருகை தந்தார். தமுக்கம் உள்ளிட்ட வன்முறை நிகழ்ந்த பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளுடன் சென்று அவர் பார்வையிட்டார். பொதுக்களிடம் அறிவித்துவிட்டு தான் மீண்டும் வருவதாக நீதிபதி ராஜேஷ்வரன் அறிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை விவரங்களை தரலாம் என்றும் கூறினார்.

இந்நிலையில், அவர் மதுரைக்கு வந்து விசாரிப்பார் என்று பாதிக்கப்பட்ட ஆவலோடு காத்திருந்த நிலையில், அவர் மதுரைக்கும் வரவில்லை. கோவைக்கும் செல்லவில்லை. தமிழகத்தின் எந்த பகுதிக்கும் செல்லாமல், சென்னையில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொதிகை அலுவலகத்தில் மட்டும் அமர்ந்து கொண்டு கமிஷனை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் மதுரையில் பாதிக்கப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்டோர் தங்களது குறைகளை நீதிபதியிடம் சொல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications