தமிழிசை, எச். ராஜா உருவபொம்மை எரிப்பு - சென்னை சென்ட்ரலில் விசிகவினர் மறியல்
பாஜக மாநில தலைவர் தமிழிசையைக் கண்டித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்ட்ரல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரபப்பு ஏற்பட்டது.
தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஆகியோரின் உருவபொம்மையை எரித்து மறியல் செய்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மெர்சல் பட விவகாரம் இப்போது பாஜக, விசிக விவகாரமாக மாறியுள்ளது. விஜயை விமர்சித்து அவரை வளைத்துப்போட முயற்சி செய்கிறது என்று கூறினார் திருமாவளவன்.
இதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் கட்டப்பஞ்சாயத்து நடத்தி வளைத்து போடுகின்றனர் என்றார். இது பரபரப்பு தீயை பற்ற வைத்து விட்டது. இதனையடுத்து தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விசிக தொண்டர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

தமிழிசை சவுந்தராஜனின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. இதனையடுத்து சுமூக தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறினார் தமிழிசை. இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரபரப்பான சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசார் வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். எனினும் தமிழிசை, எச். ராஜாவை கைது செய்யும் வரை ஓயப்போவதில்லை என்று கூறியுள்ளனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications