காவிரி பிரச்சனைக்கு தீர்வு, கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை... ஆளுநர் வித்யாசாகர் ராவ் உறுதி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண தாம் உதவுவேன் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்றார். அவர் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் சென்னை தமிழ் சங்கம் சார்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேசியதாவது:

சட்டக் கல்லூரியில்...

சட்டக் கல்லூரியில்...

சென்னை சட்ட கல்லூரியில் நான் படித்த போது திருவள்ளுவர் பற்றி தெரிந்து கொண்டேன். உலக மக்களுக்கு திருக்குறள் வழிகாட்டியாக உள்ளது.

கங்கை கரையில் திருவள்ளுவர்

கங்கை கரையில் திருவள்ளுவர்

கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை அமைப்பது அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய சிறப்பு ஆகும். உத்தரகாண்ட், உத்தரபிரதேச மாநில ஆளுநர்கள் ஒத்துழைப்புடன் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

கல்வியில் திருக்குறள்

கல்வியில் திருக்குறள்

திருக்குறளை தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் கல்வியில் கொண்டுவர வேண்டும். காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த விவசாயிகளின் பிரச்சினை குறித்து எனக்கு தெரியும்.

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண

இருப்பினும் காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண என்னால் முடிந்தவற்றை செய்வேன். தமிழ்மொழி மிக பழமையான மொழி. செம்மொழி அந்தஸ்தை தமிழ் அடைவதற்கு அதனுடைய மிக சிறந்த இலக்கியங்களும், இலக்கணங்களும் காரணம்.

இவ்வாறு வித்யாசகர் ராவ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+