விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் திடீர் மர்ம மரணம்- ஐடி ரெய்டில் சிக்கியவர்!
அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் ஐடி சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் சுப்பிரமணியம் திடீரென மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சர்ச்சைக்குரிய அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் இன்று திடீரென மர்மமாக மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் சுப்பிரமணியம் வீட்டில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இவை விஜயபாஸ்கருக்கு கடும் நெருக்கடியைத் தரக் கூடியவை என கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று சுப்பிரமணியம் திடீரென மர்மமான முறையில் அவரது தோட்டத்து பங்களாவில் இறந்து கிடந்தார். முதலில் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
ஆனால் மாரடைப்பால்தான் சுப்பிரமணியம் இறந்தார் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது சுப்பிரமணியம் உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியம் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications