தொகுதிப் பிரச்சினை சார்ந்த விவகாரங்களுக்காக முதல்வரை சந்தித்தேன் - விஜயதாரணி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதிப் பிரச்சினை சார்ந்த விவகாரங்களுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சட்டசபை கூட்டம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா வெளியில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி முதல்வர் ஜெயலலிதாவிடம் சென்று ஒரு மனுவை கொடுத்து சந்தித்துப் பேசினார்.

Vijayadharani MLA met chief minister Jayalalitha

முதல்வர் சந்திப்பு குறித்து விஜயதாரணி கூறுகையில், ''முதல்வரிடம் தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். என் பதவி பறிக்கப்பட்டது அநீதியாகும். பெண்களுக்கு எதிராக இளங்கோவன் செயல்படுவதாக கூறினார்.

மேலும் என் நீக்கம் தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு கடிதம் மூலம் விளக்கம் கேட்டுள்ளேன். அவர்கள் சொல்லும் பதிலுக்கேற்பவே, என் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி பதவியில் இருந்து நேற்றிரவு அதிரடியாக நீக்கப்பட்ட விஜயதாரணி, இதற்கு டெல்லி சென்று நியாயம் கேட்கப் போவதாக கூறி வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதாவை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+