உங்கள் ஆட்சியில் இந்தியா வல்லரசாக மாறும் - பிரதமர் மோடிக்கு "பேரரசு" விஜயகாந்த் வாழ்த்து!
சென்னை: பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கடிதம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
நாளை பிரதமர் மோடி தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், அதற்குப் பதிலாக காஷ்மீர் வெள்ளத்திற்கு நிதியுதவி செய்யுங்கள் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், தமிழக பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த், மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க.வின் சார்பில் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இந்திய நாடு வல்லரசாக மாறுவதற்கு தங்களின் நிர்வாகத் திறமைமிகு தலைமையும், அரசை வழிநடத்தும் ஆற்றலும் காரணமாக அமையும் என்பதால் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், பூரண நலத்தையும் அருள மனப் பூர்வமாக வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.