‘வாயை மூடிப் பேசவும்'... "கேப்டனுக்கு" அன்புக் கட்டளையிடும் உளுந்தூர்பேட்டை தொண்டர்கள்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில், அவர் பேசாமல் வணக்கம் மட்டும் கூறி வாக்குச் சேகரித்தால் போதுமானது என அவரது கட்சி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனராம்.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி மக்கள்நலக் கூட்டணியுடன், தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் தமாகாவும் இடம் பெற்றுள்ளது.
இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

கன்பியூசன்...
இந்நிலையில், நேற்று முன் தினம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த விஜயகாந்த், பின்னர் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தனது தொகுதியை உளுந்தூர்பேட்டை என்பதற்குப் பதிலாக உடுமலைப்பேட்டை என அவர் உச்சரித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

மக்கழே...
இதுமட்டுமின்றி சமீபகாலமாக அவர் பங்கேற்கும் அனைத்து பிரச்சார கூட்டங்களிலும் சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய் அவரது பிரச்சாரம் முடிவதாக மக்கள் வெளிப்படையாகவே விமர்சிப்பதைக் காண முடிகிறது.

சொந்தத் தொகுதியில்...
இந்த சூழ்நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால், தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் மட்டும் ஒரு வாரம் தங்கி பிரச்சாரம் மேற்கொள்வது என விஜயகாந்த் முடிவு செய்துள்ளாராம்.

8ம் தேதி முதல்...
அதன்படி, அடுத்தமாதம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவர் உளுந்தூர்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஆனால், வழக்கம் போல் தனது அதிரடிசெய்கைகள் மற்றும் பேச்சால் விஜயகாந்த் ஏதாவது செய்யப்போக, அது அவரது வெற்றியைப் பாதித்துவிடக் கூடாது என அவரது கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனராம்.

வணக்கம் போதும்...
எனவே, உளுந்தூர்பேட்டையில் வெறும் வணக்கம் மட்டும் கூறி விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டால் போதுமானது. வேறு எதுவும் பேச வேண்டாம் என்பது அவர்களின் அன்புக் கட்டளையாம். ஆனால், இதற்கு எந்தளவிற்கு விஜயகாந்த் ஒத்துழைப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
விஜயகாந்தின் வலதுகரத்திற்கே சீட் இல்லையா.. தேமுதிகவில் புதிய பஞ்சாயத்து -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications