அரசியலுக்கு ஒருவாரம் லீவு.... ஜக்கி வாசுதேவின் ஈஷாவில் யோகா பயிற்சிக்காக மகனுடன் விஜயகாந்த் 'டேரா'
கோயம்புத்தூர்: பீகார் தேர்தல் முடிவுகளை முன்வைத்து நாடு முழுவதும் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோவையில் ஒரு வார யோகா பயிற்சிக்காக முகாமிட்டுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோயம்புத்தூர் அருகே உள்ள ஈஷா யோகா மையத்துக்கு பயிற்சிக்காக மகனுடன் சென்றிருக்கிறார். ஈஷாவில் ஒரு வார காலம் விஜயகாந்த் தங்கியிருப்பார் என தெரிகிறது.
ஈஷா யோகா மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ், தற்போது மும்பையில் உள்ள நிலையில் அவர் கோவை திரும்பியதும் அவரை சந்தித்துவிட்டுதான் விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்கின்றன தே.மு.தி.க. வட்டாரங்கள்.
இனியாவது கோபம் குறையுமா?












Click it and Unblock the Notifications