அன்புமணிக்காக தர்மபுரியில் நாளை விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி லோக் சபா தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாசை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் செய்கிறார்.

தமிழகத்தில் லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி யில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் இட.ம்பெற்றுள்ளன.
இக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தர்மபுரி லோக் சபா தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாசை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாளை (15-ந்தேதி) தர்மபுரியில் பிரசாரம் செய்கிறார். இரவு 7 மணியளவில் தர்மபுரி சுற்றுலாமாளிகை அருகில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூ ட்டத்திலும் விஜயகாந்த் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications