வேட்புமனு தாக்கல் செய்யும்போது விஜயகாந்த் கேட்டாரே ஒரு கேள்வி! ஆடிப்போன அதிகாரி
உளுந்தூர்பேட்டை: வேட்புமனு தாக்கல் செய்யும்போதே எதற்கு உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதையொட்டி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், கட்சி நிர்வாகிகளோடு விஜயகாந்த் வருகை தந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ததும், உறுதிமொழி ஏற்பது வழக்கம். அதேபோல விஜயகாந்த்தையும் உறுதிமொழி எடுக்குமாறு, தேர்தல் அலுவலர் முகுந்தன் அறிவுறுத்தினார்.
உறுதிமொழி
இதனால் விஜயகாந்த் சற்று கோபமடைந்துவிட்டார். ''வேட்புமனு தாக்கல் செய்யும்போதே உறுதி ஏற்கச் சொல்கிறீர்கள். பின்னர் வேட்புமனு பரிசீலனையின் சிலரது மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. அல்லது சிலர் வாபஸ் பெற்று விடுகின்றனர். எனவே ஒரேடியாக வேட்புமனு பரிசீலனைக்குப்பின், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் வேட்பாளர்களிடம் உறுதி மொழி ஏற்கச் செய்யலாமே'' என்றார் விஜயகாந்த்.

கைபிசைந்த வட்டாட்சியர்
விஜயகாந்த் தனது கோரிக்கையில், நியாயம் இருப்பதாகவே கருதினார். இருப்பினும், விதிமுறைப்படி அப்படி நடைபெறுவதில்லை என்பதால், வட்டாட்சியர் கையை பிசைந்தார்.

அறிவுறுத்தல்
இதையடுத்து பிரேமலதாவும், கட்சி நிர்வாகிகளும், விதிமுறைப்படிதான் அதிகாரியால் செயல்பட முடியும். எனவே உறுதி மொழி வாசித்துவிடுங்கள் என்று அறிவுறுத்தினர்.

சலசலப்பு
இதையடுத்து விஜயகாந்த் உறுதிமொழியை வாசித்தார். இதனால் வேட்புமனு தாக்கல் செய்த இடத்தில் ஒரு சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications