தான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொல்றார் நத்தம் விஸ்வநாதன்: போட்டு தாக்கும் விஜயகாந்த்
சென்னை: மின்துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒரே பொய்யை திரும்ப திரும்ப கூறுவதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை போன்ற மின்னுற்பத்தி நிலையங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு வழங்கப்படும் கருணைத்தொகை சமீபகாலமாக ஒரு சிலருக்கு வழங்கியும், பலருக்கு வழங்காமலும் ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதுபோல் மனித நேயம் இல்லாமல், ஆளும் அதிமுக அரசு நடந்துக்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பணி நிரந்தரம்வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் எவ்வளவோ போராடியும், அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் இதுபோன்ற ஆறுதல் தொகையையும்கூட கொடுக்க மறுப்பது என்ன நியாயம்?.
தொழிலாளர்களின் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் இதனால் தீரப்போவதில்லை என்றாலும், இதுபோன்ற பண்டிகை காலங்களில் அவர்களுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு இந்த அரசு தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பாரபட்சமின்றி தீபாவளி கருணைத்தொகையை உடனடியாக வழங்கிடவேண்டும்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அவரது துறையில் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என்று அப்பட்டமாக பொய்யான தகவலை தெவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் மறைமுகமாக எவ்வளவோ ஒப்பந்த தொழிலாளர்கள் இன்னும் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சொன்ன பொய்யையே திரும்பவும் சொல்லாமல், அத்தனை ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய முன்வரவேண்டும். இல்லையென்றால் அவர்கள் அத்தனை பேரையும் ஒன்று திரட்டி தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் சார்பில் எனது தலைமையில் இந்த அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications