"பணப் பட்டுவாடா".. தேமுதிக வக்கீல்களுடன் விஜயகாந்த் ஆலோசனை!
சென்னை: சென்னையில் இன்று தேமுதிக வக்கீல்களை அழைத்து அவர்களுடன் கட்சித் தலைவர் விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தினார். தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியினர் நடத்தும் பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்துவது எப்படி என்று இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினாராம்.
இதே கூட்டத்தில், யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்தும் கட்சி வக்கீல்களிடம் கருத்தைக் கேட்டறிந்து கொண்டாராம் விஜயகாந்த்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் விஜயகாந்த் என்று யாருக்குமே தெரியாமல் உள்ளது. தேமுதிகவும் அதுகுறித்து இதுவரை முறைப்படி அறிவிப்பு வெளியிடவில்லை.
இந்த நிலையில் இன்று தேமுதிகவின் வக்கீல்கள் பிரிவினருடன் கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது ஆளுங்கட்சி உள்ளிட்ட கட்சியினர் பணப் பட்டுவாடா செய்தால் அதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாம்.
மேலும் தேர்தலின்போது எழும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவது குறித்தும் வக்கீல்களுடன் விஜயகாந்த் ஆலோசித்தாராம்.












Click it and Unblock the Notifications