உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ள தீபக் மிஸ்ராவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை: உச்சநீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட தீபக் மிஸ்ராவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் டுவிட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஜே. எஸ்.கேஹரின் பதவி காலம் கடந்த 27-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு, தற்போது நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை ஜே.எஸ்.கேஹர் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமித்து மத்திய அரசு அறிவித்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக
— Vijayakant (@iVijayakant) August 28, 2017
பொறுப்பேற்றுள்ள உயர்திரு.தீபக்மிஸ்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! pic.twitter.com/SARujdb9fP
இந்நிலையில் புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட தீபக் மிஸ்ரா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு தனது வாழ்த்துகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications