மருத்துவமனையில் நண்பர் இப்ராகிம் ராவுத்தர்... திடீரென சந்தித்த விஜயகாந்த்
சென்னை: தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், தனது நண்பரைப் பார்த்துப் பேசிய பின்பு கண்ணீர் விட்டு அழுதாராம்.
விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார், இதனைக் கேள்விப்பட்ட விஜயகாந்த் அவரைச் சந்திக்க மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.
சிலநிமிடங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு வெளியில் வரும்போது, தனக்கும் அவருக்கும் இடையே இருந்த நட்பைக் கூறி, கண்ணீர் சிந்தியிருக்கிறார். விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தர் விஜயகாந்தை வைத்து பல படங்கள் தயாரிக்கும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்தவர்.
விஜயகாந்தின் திருமணத்திற்குப் பின்பு அந்த நெருக்கம் படிப்படியாகக் குறைந்து, நாளடைவில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்று போனது. தற்போது அவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்ததுதான் விஜயகாந்தின் வருத்ததிற்குக் காரணமாம்.