தமிழக காவல்துறையின் ரோல்மாடல் அண்ணன் “கேப்டன்”- திருச்சியில் வெளுத்துவாங்கிய பிரேமலதா!
திருச்சி: தமிழக காவல்துறையினருக்கே ரோல்மாடலாக திகழ்பவர் கேப்டன் விஜயகாந்த் என்று பிரேமலதா திருச்சியில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் தெரிவித்தார்.
திருச்சி உறையூரில் தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை விளக்க கூட்டத்தில் அவர், "கேப்டன் ஞானப்பழம். அந்த பழம் தேனில் விழுந்த பழம். என்றைக்கும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர்.

திமுகவுடன் கூட்டு வைத்தால் ஈசியாக ஜெயித்திருக்கலாமாம். அரசனை நம்பி புருசனை விட்ட கதை தான் தேமுதிகவை விட்டு சென்றவர்களின் நிலை. துரோகிகள் யாரையும் தமிழகம் வாழ வைத்தது இல்லை. கொடநாடு நாயகியாக இருந்தாலும் சரி, காமடியனாக இருந்தாலும் சரி கேப்டனை எதிர்த்தவர்கள் வாழ்ந்தாக சரித்திரம் இல்லை
சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. தமிழக போலீஸ்க்கு ரோல்மாடல் கேப்டன் தான். போலீஸ் அகாடமியில் பயிற்சியில் கேப்டனின் படங்களை காண்பித்து கற்றுக்கொடுக்கிறார்கள். ரமணாவாக கேப்டன் உருவெடுப்பார். ஊழல்கள் பற்றி இமெயில் புகார் அனுப்பினால் உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். அம்மாவை நம்புனிங்க, அய்யாவை நம்புனிங்க, இந்த ஒருமுறை இந்த அண்ணனை நம்புங்க. ஜெயலலிதா சட்டசபையில் தான் முதன்முதலில் ஆண்மகனை பாத்திருப்பார்'' என்று பேசினார்.












Click it and Unblock the Notifications