ஈஷா யோகா பயிற்சியால் உடல் மற்றும் மன ரீதியாக புத்துணர்ச்சியடைந்துள்ளேன்: விஜயகாந்த்
கோவை: ஈஷா யோகா பயிற்சியால் உடல் மற்றும் மன ரீதியாக புத்துணர்ச்சியடைந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை வெள்ளிங்கிரி பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் ஒரு வார கால தியானத்திற்கு பின்னர் சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டபோது 28 அமைச்சர்கள் அத்தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினர். தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் 5 அமைச்சர்கள் மட்டுமே முகாமிட்டுள்ளனர். கூடுதலாக அமைச்சர்களை நியமித்திருக்கலாம்.
மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்காமல் உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் பகுதி மக்களை விரைவில் சந்திப்பேன்.
நாட்டில் சகிப்பு தன்மை குறைந்து விட்டது. அரசு அதிகாரிகளுக்கு முதலில் சகிப்பு தன்மை வரவேண்டும். மக்கள் நல கூட்டணியில் தேமுதிகவை அழைத்ததற்கு நன்றி. ஈஷா யோக மையத்தில் மேற்கொண்ட ஒரு வார யோக பயிற்சியில் உடல் மற்றும் மன ரீதியாக புத்துணர்ச்சியடைந்துள்ளதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications