காவிரிக்காக 2008-ல் 'கணீர் குரலில் 'தெளிவாக' விளாசிய பேச்சு - பேஸ்புக்கில் விஜயகாந்த் போட்ட வீடியோ
சென்னை: 2008-ம் ஆண்டு காவிரி நீருக்காக தமிழ்த் திரை உலகத்தினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தாம் பேசிய வீடியோவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காவிரி பிரச்சனைக்கு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கொடுத்திருந்தாலும் அது நடைமுறைக்கு வந்தபாடில்லை. மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டிய நிலை உள்ளது.
உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் அதை செயல்படுத்த கர்நாடகா தயாராக இல்லை... கர்நாடகா அரசை செயல்படுத்தவிடாமல் கன்னட அமைப்புகள் வன்முறையை கையிலெடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு தமிழர்களுக்கு எதிராக பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர் கன்னட கும்பல். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அது 2008-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனைக்காக சென்னையில் தமிழ் திரை உலகத்தினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகாந்த் பேசிய வீடியோ.... வழக்கம் போல காவிரி பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதை சொல்லாமல் ஆனால் தற்போது பேசுவதைவிட உரத்த குரலில் கணீரென விஜயகாந்த் பேசுகிற அந்த வீடியோ இது: