இன்னும் 4 நடிகர்கள் கூட வரட்டும்.. எனக்கென்ன.. பலே விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

நெடுவாசல், புதுக்கோட்டை: கமல், ரஜினி மட்டுமல்ல, இன்னும் நான்கு நடிகர்கள் கூட வரட்டும். எனக்கு ஒரு கவலையும் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

கதிராமங்கலத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்திற்கு வருகை தந்த விஜயகாந்த் அங்கு போராட்டம் நடத்தி வரும் மக்களைச் சந்தித்தார். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் விஜயகாந்த்.

Vijayakanth's take on Rajini and Kamal

அப்போது செய்தியாளர்கள் அவரிடம், கமல், ரஜினி குறித்து கேட்டனர். அதற்கு விஜயகாந்த் தனது ஸ்டைலில், கமல், ரஜினி வரட்டும். கூடவே நான்கு நடிகர்கபம் கூட வரட்டும். எனக்கு கவலையே இல்லை. அவர்கள் வரட்டும். எனக்கு அது பற்றி ஒன்றும் இல்லை என்றார் விஜயகாந்த்.

இந்தித் திணிப்புகுறித்த கேள்விக்கு விஜயகாந்த் பதிலளிக்கையில், இந்தி படிப்பதையெல்லாம் திணிப்புன்னு சொல்லக் கூடாது. அது திணிப்பு ஆகாது என்று வித்தியாசமாக விளக்கம் அளித்தார்.

தமிழக அமைச்சர்கள் குறித்த கேள்விக்கு, ஜெயலலிதா இருந்தபோது யாருமே பேசவில்லைத. இப்போது பேசுகின்றனர். அப்ப ஏன் பேசலை, இப்ப ஏன் பேசறாங்க என்றார்.

தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றஉம் விஜயகாந்த் கோரிக்கை வைத்தார். மேலும் தமிழகத்தின் தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமே திமுகதான் என்றும் விஜயகாந்த் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+