மகன் பட ஷூட்டிங்.. பாரீன் போக ரெடியாகிறார் விஜயகாந்த்.. தேர்தல் முடிந்ததும் பறப்பார்?
சென்னை: மகன் பட ஷூட்டிங்குக்குப் போக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரெடியாகி வருகிறாராம். தேர்தல் முடிந்த கையோடு அவர் வெளிநாடு பறந்து விடுவாராம். அங்கு ஒரு பக்கம் ஷூட்டிங், மறுபக்கம் அவருக்கு சிகிச்சை என பிசியாகப் போகிறதாம் விஜயகாந்த் குடும்பம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உடல் நலனில் சில பிரச்சினைகள் உள்ளது. இதனால் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பும் கூட அவர் வெளிநாடு போய் சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்பினார். ஆனால் அதன் பின்னர் அவரது பேச்சும், செயலும் முற்றிலும் மாறிப் போய் விட்டது.

மேடையில் அவர் தெளிவில்லாமல் பேசுகிறார், தெளிவில்லாமல் நடந்து கொள்கிறார். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு தராமல் தொடர்ந்து அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள், தொடர்ந்து அவரை அலைய வைக்கின்றனர், பேச வைக்கின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்த கையோடு அவர் வெளிநாட்டுக்குச் சிகிச்சைக்குச் செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தனது தொண்டைக்கான சிகிச்சை, மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் ஆகியவை காரணமாக அவர் வெளிநாடு செல்லவுள்ளாராம்.
இதேபோல மேலும் சில தலைவர்களும் கூடதேர்தலுக்குப் பின்னர் பல்வேறு இடங்களுக்குப் போய் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறது. முதல்வர் ஜெயலலிதாவும் நீண்டதொரு ஓய்வுக்குத் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications