விஜயதாரணி எம்.எல்.ஏ.வின் கணவர் சிவக்குமார் கென்னடி மாரடைப்பால் மரணம்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், விளவங்கோடு எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணியின் கணவர் சிவக்குமார் கென்னடி இன்று மாலை 4 மணியளவில் திடீரென காலமானார்.
59 வயதான சிவக்குமார் கென்னடி ஒரு வழக்கறிஞர். விஜயதாரணி- சிவகுமார் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவர் ஏற்கனவே உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார்.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக வெள்ளிக்கிழமையன்று விஜயதாரணி நியமிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து டெல்லியில் கட்சித் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க சென்றார். இந்தநிலையில் கணவர் உயிரிழந்ததை அறிந்து அவசர, அவசரமாக சென்னை திரும்பிய விஜயதாரணி கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.