கரூர் கோவிலுக்கு விஜயேந்திரர் விஜயம்.. மாணவிகள், பொதுமக்களுக்கு அருளாசி
கரூர்: கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு காஞ்சி விஜயேந்திரர் விஜயம் செய்து, பொது மக்களுக்கு, மாணவிகளுக்கு அருளாசி வழங்கினார்.
கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு விஜயேந்திரர் வருகைத தந்தார். அங்கிருந்த ஆன்மீக மக்களுக்கும், மாணவிகளுக்கும் அருள் வழங்கியதோடு அறம்காத்த நாயகி காமாட்சியம்மன் புகழை எடுத்து கூறினார். மேலும் காஞ்சி பெரியவர் கரூர் வந்து இக்கோயிலை எடுத்து கட்டியதை சுட்டி காட்டினார்.
மேலும் இங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலில் மதுரைவீரன், நவக்கிரகங்கள், சப்தகன்னிமார்கள் அருள் பாலிப்பதாகவும் பக்தர்களுக்கு எடுத்து கூறினார். மேலும் மனிதனின் ஆன்மீகத்தின் மூலம் மனிதனுடைய சக்தி அதிகரிக்கிறது. மனிதன் வாழ்க்கையில் ஒரு சக்தி இருக்கிறது என எடுத்து கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் சிவாசாரியார் திலகம் முரளி சிவாச்சாரியார். காமாட்சியம்மன் கோயில் நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், ஸ்ரீ சக்தி நர்சிங்க் கல்லூரி தலைவருமான சக்தி சிதம்பரம், ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அல்லி சிதம்பரம் உள்ளிட்டவர்களும், ஸ்ரீ சக்தி நர்சிங் கல்லூரி மாணவிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜயேந்திரரின் அருள் பெற்றனர்.